கல்வி அமைச்சு இந்த விண்ணப்பங்களை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பும்.
நேர்முகபரீட்சைக்கு அழைக்கப்பட்டால் உங்கள் சான்றிதழ்கள் மற்றும் பிற உரிய ஆவணங்களுடன் நீங்கள் தோற்ற வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீங்கள் தொடர்புக்கான குறியெண்ணை பெறுவீர்கள். (தேவையின் போது அதை பயன்படுத்துங்கள்)
சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தகவல்களை உள்ளிடும் போது unicode எழுத்தை பயன்படுத்துக.
விண்ணப்பம் அனுப்புவது தொடர்பாக யாதும் பிரச்சனை இருப்பின் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்
க.பொ.த உயர்தர விண்ணப்பப்படிவம் (2019 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கானது)
பாடாசாலை மற்றும் விண்ணப்பப்படிவங்கள்i
Here we have listed the school details for GCE A/L Admission for 2019 OL Passed Students. Here we have given the details that we have got. Its your responsibility to follow proper procedures to get the admission of that schools. We try our best to get all relevant schools from the island.
Note : Priorities should be given to famous schools
( Ministry of education starts new procedure of online student admission for the GCE AL classes from 12.05.2020 via info.moe.gov.lk
Time Table of Guru Gedara Educational TV Channel for fourth week has been released. Channel Eye telecast this educational programme for Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums.
Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums should use this TV Programme. Teachers and parents should guide the students according to the given Time Table
குருகுலம் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையின் எதிர்வரும் வாரத்திற்கான (04.05.2020 - 10.05.2020) பாட நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாட்டில் மக்களின் வாழ்க்கை நிலைமையை சுமுக நிலைக்கு கொண்டு வர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
11 ஆம் திகதியிலிருந்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்து ஏனைய 23 மாவட்டங்களுக்கும் அதிகாலை 05.00 மணி தொடக்கம், இரவு 08.00 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும். மீண்டும் அறிவிக்கும் வரை தினந்தோரும் இவ்வாறு பகல் நேரத்தில் (மு.ப. 5.00 தொடக்கம் இரவு 08.00 வரை) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் பிரதேசங்களில் மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சாதாரணமாக கொண்டு செல்ல முடியுமான போதிலும், தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் வீட்டை விட்டு வெளியே வருமாறும் ஏனைய சந்தர்ப்பங்களில் வீட்டினுள்ளேயே இருக்குமாறும் அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டிக் கொள்கின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மே மாதம் 11 முதல் திறக்கப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும். அது தொடர்பான திட்டமிடல் பணிகளை மேற்கொள்வது குறித்த நிறுவனத் தலைவர்களாகும். நிறுவனங்களுக்கு வேலைக்கு வர வேண்டிய ஆளணியினரின் தொகையைத் தீர்மானிப்பதும் குறித்த நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும். அதே போன்று குறித்த நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது சுகாதார துறையினரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் நிறுவனத் தலைவர்களை சாறும். தனியார் துறை நிறுவனங்களை ஆரம்பிக்;க வேண்டிய நேரம் மு.ப. 10 .00 மணியாகும்.
மேலதிக தகவல்களை பின்வரும் இணைப்பில் (சிங்கள மொழியில் பெற்றுக் கொள்ளலாம்.)
பசிந்து ஹிருஸான் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன். சிரேஸ்ட மாணவர்களின் செயற்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இம்மாணவன் தற்போது மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் சிறிய தூரம் நடக்கின்றார். எனினும் அவரினால் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
எழுதுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உடலின் ஒரு பக்கம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவன் தொடர்ந்தும் ICU வில் சிகிச்சை பெற்று வருகின்றான்.
Epidemiology unit of the ministry of health and indigenous medical services has released a book on Covid 19 laboratory test strategy in Sri Lanka. It explains , how the case finding process is going on and he testing algorithm.
கோவிட் 19 ஆய்வுகூட பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது என்பதை விளக்கி, சுகாதார அமைச்சு ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ஒரு நோயாளி எவ்வாறு இனம் காணப்படுகின்றார. எவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நோய் தொற்று இருப்பது, இல்லாமை எவ்வாறு இனம் காணப்படுகின்றது என்பதை அது விளக்குகின்றது.
Health Ministry has issued the Operational guidelines on preparedness and response for covid-19 outbreak for work settings barber and beauty salons. This circular should be consider with the main circular which has already been issued regarding Operational Guidelines on Preparedness and Response for COVID - 19 Outbreak for Work Settings. main Circular also given at the bottom
Health Ministry says that it has been decided to allow the business ventures who have wider distribution networks around the country to travel freely within the districts where the curfew is lifted and also to allow to enter and exit and district without any restriction.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் நாடு முழுவதும் பரவலான விநியோக வலையமைப்புகளைக் கொண்ட வணிக முயற்சிகளை சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு தடையும் இன்றி மாவட்டத்திற்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அன்றாட மனித நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பிப்பது தெடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, அம்மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை எதிர்வரும் 11.05.2020 முதல் இயங்கச் செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கல்வி சார் ஊழியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை மீண்டும் வேலைக்கு திரும்பும் நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தலைவர்கள் பொருத்தாமன பொறிமுறையை கையாளுமாறும் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழக கல்விசார் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எனவும் அவ்வறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.