Law College Entrance Exam (Application and Passpapers)
- Passed GCE A/L Exam
- Passed GCE O/L Exam (C Passes in English, Sinhala/Tamil)
- Age Over17
நிபந்தனைகள் பலவற்றின் கீழ் july (06) தொடக்கம் பல்கலைக்கழக கட்டமைப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தள்ளார்.
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பாக July 06 அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இதற்கு அமைவாக கடந்த ஜுன் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. இன்று தொடக்கம் 2 ஆம் மற்றும் 3 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டமைப்பு திறக்கப்பட்டது. இதற்கு அமைவாக அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுக்கு மாணவர்களை அழைப்பதற்கு முடியும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் அனைத்து மருத்துவ பீடங்களில் இறுதி பரீட்சை நடவடிக்கைகள் ஜுன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த பரீட்சை நடத்தும் செயற்பாடுகள் தற்பொழுது நிறைவடைந்து வருகிறது.
இதே போன்று கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான விசேட உறுதிப்பாடுகளை கடுமையாக கடைபிடிப்பதற்கு உட்பட்ட வகையில் , தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பிற்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு இன்று முதல் (ஜீலை 06) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் முதுநிலை பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை கீழ் கண்ட 11 நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கு அமைவாக இந்த நிபந்னைக்கு அமைய பல்கலைக்கழக கட்டமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க கொவிட் 19 தொற்று நாட்டுக்குள் பரவியதனால் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மூடப்பட்ட போதிலும் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.